முகப்பு | தொடக்கம் |
எனைப் பல் யானையும் |
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|