முகப்பு | தொடக்கம் |
ஏற்றுக உலையே |
172 |
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; |
|
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் |
|
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; |
|
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் |
|
5 |
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, |
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், |
|
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் |
|
வன் புல நாடன், வய மான் பிட்டன்: |
|
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை |
|
10 |
மா வள் ஈகைக் கோதையும், |
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
|