முகப்பு | தொடக்கம் |
ஏற்று வலன் உயரிய |
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|