முகப்பு | தொடக்கம் |
ஐயோ எனின் |
255 |
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே; |
|
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; |
|
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை |
|
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! |
|
5 |
நிரை வளை முன் கை பற்றி |
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
....................வன்பரணர் பாடியது.
|