ஒண் செங் குரலித்

283
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்
பௌவ உறை அளவா,
..................................................................... வி மயக்கி,
5
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,
வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,
மன்றுள் என்பது கெட...
...........................................£னே பாங்கற்கு
10
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க,
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர,
தெற்றிப் பாவை திணி மணல் அயரும்
மென் தோள் மகளிர் நன்று புரப்ப,
.....................................................ண்ட பாசிலைக்
15
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.

திணை தும்பை; துறை பாண் பாட்டு.
அடை நெடுங் கல்வியார் பாடியது.