முகப்பு | தொடக்கம் |
ஒரு தலைப் பதலை தூங்க |
103 |
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் |
|
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, |
|
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் |
|
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! |
|
5 |
செல்வைஆயின், சேணோன் அல்லன்; |
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை |
|
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் |
|
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; |
|
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை |
|
10 |
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, |
அலத்தற் காலை ஆயினும், |
|
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|