முகப்பு | தொடக்கம் |
வழிபடுவோரை |
10 |
வழிபடுவோரை வல் அறிதீயே; |
|
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; |
|
நீ மெய் கண்ட தீமை காணின்; |
|
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; |
|
5 |
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், |
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே |
|
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் |
|
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை |
|
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் |
|
10 |
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! |
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், |
|
நெய்தலங்கானல் நெடியோய்! |
|
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|