முகப்பு | தொடக்கம் |
வள் உகிர வயல் ஆமை |
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|