முகப்பு | தொடக்கம் |
வள்ளியோர்ப் படர்ந்து |
47 |
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, |
|
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து |
|
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, |
|
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, |
|
5 |
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, |
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை |
|
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட |
|
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, |
|
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் |
|
10 |
மண் ஆள் செல்வம் எய்திய |
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
|