முகப்பு | தொடக்கம் |
வாயிலோயே! வாயிலோயே! |
206 |
வாயிலோயே! வாயிலோயே! |
|
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் |
|
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து |
|
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் |
|
5 |
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! |
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி |
|
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? |
|
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, |
|
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், |
|
10 |
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; |
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் |
|
மழுவுடைக் காட்டகத்து அற்றே |
|
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
|