முகப்பு | தொடக்கம் |
விசி பிணித் தடாரி |
372 |
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, |
|
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த |
|
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, |
|
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, |
|
5 |
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், |
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், |
|
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், |
|
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட |
|
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, |
|
10 |
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் |
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் |
|
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் |
|
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|