முகப்பு | தொடக்கம் |
விழுக் கடிப்பு அறைந்த |
366 |
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் |
|
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, |
|
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, |
|
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், |
|
5 |
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; |
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! |
|
.............................உரைப்பக் கேண்மதி: |
|
நின் ஊற்றம் பிறர் அறியாது, |
|
பிறர் கூறிய மொழி தெரியா, |
|
10 |
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, |
இரவின் எல்லை வருவது நாடி, |
|
உரை..................................................... |
|
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, |
|
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, |
|
15 |
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, |
கெடல் அருந் திருவ! |
|
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, |
|
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, |
|
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, |
|
20 |
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, |
காவுதொறும் |
|
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
|