முகப்பு | தொடக்கம் |
விளங்கு மணிக் கொடும் பூண் |
130 |
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு |
|
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? |
|
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, |
|
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த |
|
5 |
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
குட கடல் ஓட்டிய ஞான்றைத் |
|
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|