முகப்பு | தொடக்கம் |
வினை மாட்சிய |
16 |
வினை மாட்சிய விரை புரவியொடு, |
|
மழை உருவின தோல் பரப்பி, |
|
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் |
|
விளை வயல் கவர்பூட்டி, |
|
5 |
மனை மரம் விறகு ஆகக் |
கடி துறை நீர்க் களிறு படீஇ, |
|
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் |
|
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, |
|
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, |
|
10 |
துணை வேண்டாச் செரு வென்றி, |
புலவு வாள், புலர் சாந்தின், |
|
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! |
|
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், |
|
பனிப் பகன்றை, கனிப் பாகல், |
|
15 |
கரும்பு அல்லது காடு அறியாப் |
பெருந் தண் பணை பாழ் ஆக, |
|
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, |
|
நாம நல் அமர் செய்ய, |
|
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. |
|
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
|