முகப்பு | தொடக்கம் |
வெண்குடை மதியம் மேல் |
294 |
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, |
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, |
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் |
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, |
|
5 |
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் |
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, |
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் |
|
அரவு உமிழ் மணியின் குறுகார் |
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. |
|
திணை தும்பை; துறை தானைமறம்.
| |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|