முகப்பு | தொடக்கம் |
ஒரு நாள் செல்லலம் |
101 |
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; |
|
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், |
|
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ |
|
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி |
|
5 |
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் |
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் |
|
கோட்டு இடை வைத்த கவளம் போலக் |
|
கையகத்தது; அது பொய் ஆகாதே; |
|
அருந்த ஏமாந்த நெஞ்சம்! |
|
10 |
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|