முகப்பு | தொடக்கம் |
ஒளிறு வாள் மன்னர் |
177 |
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், |
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, |
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை, |
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின், |
|
5 |
திங்களும் நுழையா எந்திரப் படு புழை, |
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த |
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, |
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் |
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின், |
|
10 |
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, |
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், |
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, |
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் |
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, |
|
15 |
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
இரும் பனங் குடையின் மிசையும் |
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|