முகப்பு | தொடக்கம் |
ஒன்னார் யானை ஓடைப் |
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|