முகப்பு | தொடக்கம் |
ஓர் இல் நெய்தல் கறங்க |
194 |
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் |
|
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, |
|
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் |
|
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, |
|
5 |
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! |
இன்னாது அம்ம, இவ் உலகம்; |
|
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. |
|
திணை அது; துறை பெருங் காஞ்சி.
| |
பக்குடுக்கை நன்கணியார் பாடியது.
|