ஓவத்து அன்ன இடனுடை

251
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும்
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி,
5
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!

திணை வாகை; துறை தாபத வாகை.
....................மாற்பித்தியார் பாடியது.