முகப்பு | தொடக்கம் |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே |
336 |
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே; |
|
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்; |
|
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் |
|
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த |
|
5 |
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே; |
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க, |
|
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்; |
|
அறன் இலள் மன்ற தானே விறல் மலை |
|
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் |
|
10 |
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் |
தகை வளர்த்து எடுத்த நகையொடு, |
|
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே. |
|
திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
| |
பரணர் பாடியது.
|