வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்

292
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி,
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று,
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்!
5
ஈண்டே போல வேண்டுவன்ஆயின்,
என் முறை வருக என்னான், கம்மென
எழு தரு பெரும் படை விலக்கி,
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே.

திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.