முகப்பு | தொடக்கம் |
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் |
292 |
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் |
|
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, |
|
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று, |
|
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்! |
|
5 |
ஈண்டே போல வேண்டுவன்ஆயின், |
என் முறை வருக என்னான், கம்மென |
|
எழு தரு பெரும் படை விலக்கி, |
|
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே. |
|
திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
| |
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.
|