முகப்பு | தொடக்கம் |
வேழம் வீழ்த்த விழுத் தொடைப் |
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|