வையம் காவலர் வழிமொழிந்து

8
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,
5
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல் இரு விசும்பினானும்
10
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.