முகப்பு | தொடக்கம் |
வையம் காவலர் வழிமொழிந்து |
8 |
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, |
|
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, |
|
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, |
|
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, |
|
5 |
கடந்து அடு தானைச் சேரலாதனை |
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! |
|
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; |
|
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; |
|
அகல் இரு விசும்பினானும் |
|
10 |
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
| |
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
|