கடந்து அடு தானை

110
கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
5
யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே.

திணையும் துறையும் அவை.
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.