முகப்பு | தொடக்கம் |
கடந்து அடு தானை |
110 |
கடந்து அடு தானை மூவிரும் கூடி |
|
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; |
|
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; |
|
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; |
|
5 |
யாமும் பாரியும் உளமே; |
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
|