முகப்பு | தொடக்கம் |
கடல் கொளப்படாஅது |
122 |
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார், |
|
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே; |
|
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே; |
|
வீயாத் திருவின் விறல் கெழு தானை |
|
5 |
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என, |
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி |
|
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே; |
|
வடமீன் புரையும் கற்பின், மட மொழி, |
|
அரிவை தோள் அளவு அல்லதை, |
|
10 |
நினது என இலை நீ பெருமிதத்தையே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|