முகப்பு | தொடக்கம் |
கடுங் கண்ண கொல் |
14 |
கடுங் கண்ண கொல் களிற்றால் |
|
காப்பு உடைய எழு முருக்கி, |
|
பொன் இயல் புனை தோட்டியால் |
|
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; |
|
5 |
பார் உடைத்த குண்டு அகழி |
நீர் அழுவ நிவப்புக் குறித்து, |
|
நிமிர் பரிய மா தாங்கவும்; |
|
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் |
|
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; |
|
10 |
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! |
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. |
|
புலவு நாற்றத்த பைந் தடி |
|
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை |
|
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, |
|
15 |
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் |
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு |
|
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு |
|
இரு நிலத்து அன்ன நோன்மை, |
|
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
|