முகப்பு | தொடக்கம் |
கடும்பின் அடுகலம் |
32 |
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் |
|
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? |
|
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், |
|
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, |
|
5 |
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் |
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! |
|
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி |
|
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த |
|
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் |
|
10 |
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. |
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|