முகப்பு | தொடக்கம் |
கல் அறுத்து இயற்றிய |
331 |
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல், |
|
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி |
|
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக, |
|
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் |
|
5 |
கல்லா இடையன் போல, குறிப்பின் |
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது |
|
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள், |
|
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் |
|
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில |
|
10 |
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின் |
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் |
|
போகு பலி வெண் சோறு போலத் |
|
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முது கூத்தனார் பாடியது.
|