முகப்பு | தொடக்கம் |
கல் முழை அருவிப் |
147 |
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி, |
|
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை, |
|
கார் வான் இன் உறை தமியள் கேளா, |
|
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும் |
|
5 |
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை |
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல் |
|
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி, |
|
புது மலர் கஞல, இன்று பெயரின், |
|
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|