முகப்பு | தொடக்கம் |
கவி செந் தாழிக் |
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|