முகப்பு | தொடக்கம் |
'கழிந்தது பொழிந்து' என |
203 |
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், |
|
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், |
|
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; |
|
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், |
|
5 |
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் |
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்! |
|
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், |
|
உள்ளி வருநர் நசை இழப்போரே; |
|
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் |
|
10 |
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் |
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! |
|
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.
|