களர்ப் படு கூவல் தோண்டி

311
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும்,
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை.
தாது எரு மறுகின் மாசுண இருந்து,
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
5
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து;
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே.

திணை அது; துறை பாண்பாட்டு.
ஒளவையார் பாடியது.