முகப்பு | தொடக்கம் |
களரி பரந்து, கள்ளி போகி |
356 |
களரி பரந்து, கள்ளி போகி, |
|
பகலும் கூஉம் கூகையொடு, பிறழ்பல், |
|
ஈம விளக்கின், பேஎய் மகளிரொடு |
|
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சு படு முதுகாடு; |
|
5 |
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் |
என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப, |
|
எல்லார் புறனும் தான் கண்டு, உலகத்து |
|
மன்பதைக்கு எல்லாம் தானாய், |
|
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
தாயங் கண்ணனார் பாடியது.
|