முகப்பு | தொடக்கம் |
களிறு அணைப்பக் கலங்கின |
345 |
களிறு அணைப்பக் கலங்கின, காஅ, |
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு; |
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி; |
|
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன; |
|
5 |
தெறல் மறவர் இறை கூர்தலின், |
பொறை மலிந்து நிலன் நெளிய, |
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர், |
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் |
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி, |
|
10 |
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை, |
மையல் நோக்கின், தையலை நயந்தோர் |
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே |
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி, |
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என; |
|
15 |
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர், |
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு |
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல் |
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ! |
|
என் ஆவது கொல்தானே |
|
20 |
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|