களிறு அணைப்பக் கலங்கின

345
களிறு அணைப்பக் கலங்கின, காஅ,
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன;
5
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,
10
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி,
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என;
15
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ!
என் ஆவது கொல்தானே
20
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.