முகப்பு | தொடக்கம் |
களிறு நீறு ஆடிய விடு நிலம் |
325 |
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், |
|
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, |
|
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், |
|
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் |
|
5 |
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, |
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் |
|
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் |
|
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், |
|
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் |
|
10 |
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, |
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், |
|
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் |
|
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் |
|
வேந்து தலைவரினும் தாங்கும், |
|
15 |
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. |
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|