முகப்பு | தொடக்கம் |
களிறு பொரக் கலங்கு |
306 |
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி, |
|
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர் |
|
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை |
|
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது; |
|
5 |
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் |
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு |
|
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே. |
|
திணை அது; துறை மூதில் முல்லை.
| |
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
|