களிறு பொரக் கலங்கு

306
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி,
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது;
5
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே.

திணை அது; துறை மூதில் முல்லை.
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.