முகப்பு | தொடக்கம் |
கன்று அமர் ஆயம் |
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|