முகப்பு | தொடக்கம் |
காய் நெல் அறுத்துக் |
184 |
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, |
|
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; |
|
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, |
|
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; |
|
5 |
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, |
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; |
|
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் |
|
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, |
|
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், |
|
10 |
யானை புக்க புலம் போல, |
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
| |
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
|