முகப்பு | தொடக்கம் |
கார் எதிர் உருமின் உரறி |
361 |
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, |
|
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! |
|
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல |
|
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, |
|
5 |
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் |
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, |
|
தெருள் நடை மா களிறொடு தன் |
|
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், |
|
உருள் நடை ........................ான்றதன் |
|
10 |
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், |
புரி மாலையர் பாடினிக்குப் |
|
பொலந் தாமரைப் பூம் பாணரொடு |
|
கலந்து அளைஇய நீள் இருக்கையால் |
|
பொறையொ............ மான் நோக்கின், |
|
15 |
வில் என விலங்கிய புருவத்து, வல்லென |
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் |
|
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென |
|
............................................பொலங்கலத்து ஏந்தி, |
|
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், |
|
20 |
நில்லா உலகத்து............... மை நீ |
சொல்ல வேண்டா................. முந்தறிந்த |
|
....................................................................................
| |
...............................................னார் பாடியது.
|