கார்ப் பெயல் தலைஇய

119
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை,
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப,
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து;
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ
5
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல,
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.