முகப்பு | தொடக்கம் |
காலனும் காலம் பார்க்கும் |
41 |
காலனும் காலம் பார்க்கும்; பாராது, |
|
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய, |
|
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே! |
|
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும், |
|
5 |
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும், |
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும், |
|
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும், |
|
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், |
|
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும், |
|
10 |
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும், |
கனவின் அரியன காணா, நனவில் |
|
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி, |
|
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர், |
|
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு |
|
15 |
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு |
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு |
|
எரி நிகழ்ந்தன்ன செலவின் |
|
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே. |
|
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
| |
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
|