முகப்பு | தொடக்கம் |
குய் குரல் மலிந்த |
250 |
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில் |
|
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர் |
|
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர், |
|
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, |
|
5 |
அல்லி உணவின் மனைவியொடு, இனியே |
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்! |
|
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் |
|
முனித்தலைப் புதல்வர் தந்தை |
|
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................தாயங்கண்ணியார் பாடியது.
|