குய் குரல் மலிந்த

250
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர்,
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி,
5
அல்லி உணவின் மனைவியொடு, இனியே
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்!
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே.

திணையும் துறையும் அவை.
...................தாயங்கண்ணியார் பாடியது.