முகப்பு | தொடக்கம் |
குறத்தி மாட்டிய |
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|