குன்று தலைமணந்த மலை பிணித்து

357
குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்,
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்,
பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்,
மாண்ட அன்றே, யாண்டுகள்; துணையே
5
வைத்தது அன்றே வெறுக்கை; வி................
..........................................................................................ணை
புணை கைவிட்டோர்க்கு அரிதே, துணை அழத்
தொக்கு உயிர் வௌவும்காலை,
இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே.

திணை அது; துறை ...................; பெருங்காஞ்சியும் ஆம்.
பிரமனார் பாடியது.