முகப்பு | தொடக்கம் |
குன்றும் மலையும் பல |
208 |
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, |
|
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என |
|
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, |
|
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை |
|
5 |
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? |
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் |
|
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, |
|
தினை அனைத்துஆயினும், இனிது அவர் |
|
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
|