குன்றும் மலையும் பல

208
'குன்றும் மலையும் பல பின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை
5
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்?
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்துஆயினும், இனிது அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.