முகப்பு | தொடக்கம் |
கேட்டல் மாத்திரை அல்லது |
216 |
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் |
|
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, |
|
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், |
|
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, |
|
5 |
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; |
|
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; |
|
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் |
|
பேதைச் சோழன்' என்னும், சிறந்த |
|
10 |
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, |
இன்னது ஓர் காலை நில்லலன்; |
|
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
|