முகப்பு | தொடக்கம் |
கையது கடன் நிறை யாழே |
69 |
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, |
|
புரவலர் இன்மையின் பசியே; அரையது, |
|
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் |
|
ஓம்பி உடுத்த உயவல் பாண! |
|
5 |
பூட்கை இல்லோன் யாக்கை போலப் |
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; |
|
வையகம் முழுதுடன் வளைஇ, பையென |
|
என்னை வினவுதி ஆயின், மன்னர் |
|
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, |
|
10 |
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, |
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; |
|
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் |
|
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் |
|
15 |
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் |
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், |
|
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் |
|
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, |
|
நீ அவற் கண்ட பின்றை, பூவின் |
|
20 |
ஆடு வண்டு இமிராத் தாமரை |
சூடாயாதல் அதனினும் இலையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|