முகப்பு | தொடக்கம் |
கொடுங் குழை மகளிர் |
304 |
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, |
|
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, |
|
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி |
|
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, |
|
5 |
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு |
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, |
|
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் |
|
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, |
|
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் |
|
10 |
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று |
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|