முகப்பு | தொடக்கம் |
கொய் அடகு வாட |
318 |
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க, |
|
மயில்அம் சாயல் மாஅயோளொடு |
|
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே |
|
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல், |
|
5 |
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான் |
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை, |
|
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன் |
|
புன் புறப் பெடையொடு வதியும் |
|
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|