கொய் அடகு வாட

318
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல்,
5
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான்
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை,
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன் புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே.

திணையும் துறையும் அவை.
பெருங் குன்றூர் கிழார் பாடியது.